Posts

Showing posts from March, 2012

உலக காச நோய் நாளும் மார்ச் 24ம் ராபர்ட் கோக்ன் கண்டுபிடிப்பும்

Image
 மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day)மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது. மார்ச் 24 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் (TB bacillus) அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது. 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease –

அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14

Image
பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. . அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண் அதாவது 3.14 என்பது அண்ணளவாக  ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது.(π = 3.1415926). பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல்  ( யின் பரவலாக அறிந்த அண்ணளவு ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.   நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது   ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் Albert Einstein மார்ச் 14 1879 -

கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு

Image
  நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை இ ந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல ஆண்டுகளில் ஆராய்ச்சிக்கு பிறகு முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார். வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒன்பது வகையான கால்களற்ற வேறு நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர்.  மரபணுச் சோதனைகளும் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை.  செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான ம

பூமியைத் தாக்கவிருக்கும் பாரிய சூரியப் புயல்

Image
சூரியப் புயல் என்றால் என்ன ? சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எனப்படுகிறது இதனால் ஏற்படும் விளைவு? அந்த துணிக்கைகள் மணிக்கு 6,400,000 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பூமியை தாக்கும் போது பூமியின் காந்தப் புலம் அவற்றிற்கான தடுப்புச் சுவராக நின்று தாங்கிக் கொள்ளும். இருந்தாலும் அந்தத் துணிக்கைகள் கொண்டுள்ள ஏற்றம் காரணமாக அவை இந்த மோதலின் போது பிறப்பிக்கும் சக்தி அலைகள் மனிதனின் இலத்திரனியல் மற்றும் மின் காந்த அலையில் இயக்கப்படும் தொழில்நுட்பங்களை (தகவல்தொடர்பு, செய்மதித் தொலைகாட்சி சேவைகள் போன்றவை உள்ளடங்க) பாதிக்கச் செய்யும். இதனால் செய்மதிகள், விமானப் போக்குவரத்துக்கள், மின்னியல் உபகரணங்கள்,மின்சார நிலைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. பூமியை மிக விரைவில்  08-03-2012 முதல் 10-03-2012 பாரிய சூர்யப்புயல் தாக்கவிருப்பதால், மின்க

உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்

Image
Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி ( ரஃப்லேசியா அர்னால்டி ) இரஃப்லேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்  . இ து உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும். இம்மலர் ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை அளவுக்கும் வளரக்கூடியது. இந்த மலரின் மணம் சிதைவடையும் மீன் நாற்றத்தில் இருக்கும். எனவே இது 'பிண மலர்' ( corpse flower ) என்று அழைக்கப்படுகிறது . இது பெங்குலு சுமத்ரா தீவு  இந்தோனேசியா  மலேசியா ஆகிய நாடுகளுக்குரிய மிகைச்செறிவினமாகும். டைட்டன் ஆரம்  தாலிபோட் பனை போன்றவை மிகப்பெரிய மலர்களைக் கொண்டிருப்பினும் அவை பல மலர்களின் தொகுப்பாகும். மாறாக இரஃப்லேசியா அர்னால்டி முழுமையான ஒரு தனித்த மலராகும். . பூமியின் மீது மிக பெரிய தனிப்பட்ட மலர் , மற்றும் அளவிற்கு அழிந்துபோகும் சதை ஒரு வலிமையான வாசனையை உற்பத்தி குறிப்பிடத்தக்கது . அது மட்டும் சுமத்ரா தீவு , இந்தோனேஷியா மழைக்காடுகளில் ஏற்படும் ஒரு காணப்படும் செடி.     Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி இந்தோனேஷியா மூன்று தேசிய மலர்கள் ஒன்றாகும் , மற்ற

பாம்பிற்கு பால் ஊற்றுவது ஏன்?

Image
பரோமோன்ஸ்கள் என்றால் என்ன? பரோமோன்ஸ்கள் உண்டாக்கும் விளைவு உள்ளுணர்வால் ஏற்படுவதாகும். இது உயிரினம் கற்றறிந்து உண்டாவதில்லை. மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களிலும்  பரோமோன்ஸ்கள் காணப்பட்டாலும் பூச்சியினங்களிலேயே இது மிகப்பரவலாய்க் காணப்படுகிறது.  பரோமோன்ஸ்களைப்  பற்றிய அறிவு வாசனைத் திரவியங்கள் தயாரித்தல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பாம்பிற்கு பால் ஊற்றுதல் முட்டை வைப்பதன் காரணம் என்ன ?  உண்மையும் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்இமனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெ

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

Image
எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி இந்தப் பறவைக்கு உள்ளது ! இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ! இது ஏன் சாம்பலாகிறது ? பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி ! இதற்கு சூரியன் தான் லட்சியம் ! சூரியனைத் தொடவேண்டும் என்பதே இந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம் ! பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும் ! சூரியனை நோக்கி உயரும் . ஒரு குறிப்பிட்ட எல்லையில் , சூரியனின் அதீத வெப்பத்தால் உடல் கருகி மண்ணில் விழும் ! மீண்டும் உயிர்க்கும் ! மீண்டும் சூரியனை நோக்கிக் கம்பீரமாய்ப் பறக்கும் ! வெற்றி பெற்ற எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு பீனிக்ஸ் பறவை இருக்கிறது !! அந்த போர்ப் பறவையின் ஆயுள் ரேகையில் தங்க மயிலின் தன்னம்பிக்கையின் ரேகையும் கூடுகட்டிப் பெருமைப்படுத்துகிறது !! பீனிக்ஸ் பறவை பற்றிய இன்னொரு கருத்து பீனிக்ஸ் பறவை சாம்பல் ஆவதற்கும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெறுவதற்கு இன்னுமொரு வியப்பான காரணம் சொல்லப்படுகின்றது. பீனிக்ஸ் பறவை ஒரு இலட்சிய வாதிப் பறவை எனவும் இதற்கு சூரியனைத் தொட வேண்டும் என்பதே வாழ்க்கை இலட்சியம் எனவும்இஅது சூரியன