Posts

Showing posts from September, 2010

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம்

Image
அம்பர் ( amber ) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக் குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும். அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை பொன்னம்பர் பூவம்பர் மீனம்பர் தீயின்வயிரம் செம்மீன் வயிரம் மலக்கனம் கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல் பழங்காலத்து பயினி மரம் போன்ற மரங்களின் மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் பால்ட்டிக் கடற்கரைகளிலும் கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் மீனின் வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர். திட்டப்படாத அம்பர் கற்கள் திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் 'அம்பர்' எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது . வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள்

வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்

Image
கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும் இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை அதற்குரியத்தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர் உறுதிசெய்கின்றன கறையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை தேவையில்லாதகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நு ட்பங்களை நாம் அவசியம் அறிய வேண்டும் கரையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது. அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன் கரியமில வாயு வெப்பம் நீராவி ஆகியன அடிப்பரப்புக் குழாய் வழியாக புற்றின் வெளிக்காற்றுடன் வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று மீண்டும் புற்றுக்குள் உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று புற்றினுள் சென்று புற்றின் உட்புறத்திற்க்குச் சென்றடைந்து புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து கு

தேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள்

Image
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன் , பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்

எங்களுக்கென்று ஒரு தனி Tamil Bamini keybord Layout

Image
Tamil Bamini keybord Layout for windows by Prasath (karaitivu.org) இவ் மென்பொருளை karaitivu.org File Cabinet ல் இருந்து (http://www.karaitivu.org/Home/file-cabinet) தரவிறக்கம் செய்யவும். இம்மென்பொருளானது Beta நிலையில் உள்ளது. மென்பொருளை பாவிக்கும் போது பிழைகள் (Bugs) ஏற்படின் info@karaitivu.org க்கு அறியத்தரவும். BamiSATH மென் பொருளானது இலவசமாக, எந்தவொரு உத்தரவாதமும் இன்றியே வழங்கப்படுகிறது. http://www.karaitivu.org/ *Note: BamiSATH மென்பெருளை தரவிறக்கம் வழங்கும் அனுமதி karaitivu.org க்கு மட்டுமே உள்ளது. உங்கள் இணையத்தளத்திலும் வளங்க விரும்பின் http://www.karaitivu.org/Home/file-cabinet எனும் இணைய முகவரியை உங்கள் இணையத்தளத்தில் கொடுக்கவும். இது பற்றிய உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிக தகவலுக்கு Prasath Mendis Appu sathpra@gmail.com

ஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்

Image
மூ லிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள். பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது. Sanskrit : Charati Tamil : Oridhazh thamarai English : Hybanthus Telugu : Nilakobari Malayalam : Orilai thamarai Hindi : Ratna purush Bot. Name : Hybanthus enneaspermus இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம். நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. இந்த

நீ குடித்த தேனில் எல்லாம் 600 விதமான பாக்டீரியாக்கள்

Image
மன்னிக்கவும் என்னடா தலைப்பில நீ குடித்த தேனில் எல்லாம் 600 விதமான பாக்டீரியாக்கள் என்று எண்ணக்கூடும் தேன் பற்றியது அல்ல வாயில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றியது “தேன் குடித்த உன் உதட்டில் தேன் குடித்தேன்..நான் நீ குடித்த தேனில் வெறும் இனிமை... நான் நீ குடித்த தேனில் எல்லாம் புதுமை....” இது எனது முகப்புத்தகத்தில் நான் தேடி எடுத்து போட்ட கவிதை இதற்கு வந்த comments ல் ஒன்று Other than Water, Electrolytes, Mucus, Antibacterial compounds, Various enzymes, & Opiorphin (a newly researched pain-killing substance found in human saliva) human saliva contains possibly as much as 8 million human and 500 million bacteri al cells per mL. The presence of bacterial products causes saliva to sometimes exhibit foul odor. அதெப்படி இந்த mixture உங்களுக்கு தேனாகியது? அதற்காக தேடி எடுத்து போடப்பட்ட பதிவே இது நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அத

அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை

Image
காட்டுப்பூக்களைப் போலவே அழகிய வண்ணத்தில் இருப்பதால் கடல் தாமரைகள் என அழைக்கப்படும் இந்த உயிரினத்தை ஆங்கிலத்தில் 'சீ அனிமோன்' என்கிறார்கள். ''ஆக்டினாய்டியா என்பது இதன் விலங்கியல் பெயர். அரை செ.மீ முதல் 6 அடி வரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவத்தில் அழகான தோற்றம் உடையவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருந்தாலும் இந்த உயிரினம் தனது வாழ்நாள் முழுவதும் கடலுக்குள் ஒரே இடத்திலேயே பட்டா போட்டுக் கொண்டு உயிர் வாழ்கின்றன. கால்களே இல்லாத இந்த உயிரினங்கள் ஆபத்து என்று தெரிந்தால் மட்டுமே ஒரு மிதவையைப் போல் மிதந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று அமர்ந்து கொள்கின்றன சுருக்கங்களுடன் கூடிய வட்ட இதழ்களை அற்புதமாக விரித்து கடலின் அடிப்பகுதியில் மணல் பரப்பிலோ அல்லது பாறைகளிலோ ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கின்றன. இதன் வயிறு ஒரு குழாய் மூலம் இதழ்களோடு இணைந்திருப்பதுடன் உடலின் நடுவில் வயிறே வாய் போன்றும் செயல்பட்டு மற்ற மீன் இனங்களை விழுங்குகின்றன. இவற்றின் வகைகளில் சில மட்டும் தனது அழகிய இதழ்கள் மூலமாக மற்ற மீன்களை கவர்ந்து இழுத்து அருகில் வந்தவுடன் விஷ திரவத்தைப் பீய்ச்சிக் கொன்று பின்

அதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி?

Image
பல நாட்களாக என்னிடம் வலைப்பதிவு நண்பர்கள் பலர் கேட்ட கேள்விக்கான விளக்கத்தினை இன்று எனது 100 வது பதிவின் மூலம் பகிரவுள்ளேன்..... அந்த கேள்வி என்னவென்றால் எவ்வாறு நீங்கள் அதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைத்துள்ளுர்கள் அதற்கான விளக்கம் கீழே.... முதலாவதாக உங்கள் வலைப்பூவிற்கு நுழையுங்கள் உங்கள் டாஷ்போர்டில் "Design" என்பதை கிளிக் செய்து அடுத்து "Edit HTML" என்பதை கிளிக் செய்யவும் இரண்டாவதாக - layout — > html இற்குச் செல்லுங்கள் Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள். பின்னர் > யை தேடவும்.(easy way contrl button +f key press ,top of the blog u see one box come that box u copy the < data:post.body/ > code and enter, now u can easy to find it) அதற்கு பின்னர் அந்த code க்கு பின்னால் கீழே பாக்ஸில் உள்ள Code-ஐ காப்பி பேஸ்ட் செய்து save செய்யுங்கள். இங்கு பல ஓட்டளிப்புப் பட்டைகளை ஓன்றன் பின் ஒன்றாக உள்ளது. அந்த அந்த லிங்கினை சொடுக்கி எவ்வாறு அங்குள்ள code ஜcopy and past செய்யவும் tamil10 இன் code ஐ இணைக்கவும் bogy ஓட்டள