Posts

Showing posts from August 6, 2011

கண்களை இமைக்கக் காரணம்

Image
நெஞ்சிலே வந்து பூத்த பூவே என்னை ஆளும் காதல் தீவே என் கண் விழியாய் நீ ஆனாய் உன் கண் இமையாய் நான் ஆவேன் மழை அல்லது பனியின்போது கார் பஸ்சில் சென்றால் கவனித்திருக்கலாம். அப்போது ஹவைப்பர்' அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவும். ஆனால் எந்த ஹவைப்பரும்' நம் கண் இமைகளுக்கு நகராகாது. நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன. மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது ஏன் முக்கியமானது? இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது? இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை. அதன் பணி தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. மழைநீர் வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும் இ மைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவு