உலகின் முதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலை

அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசியரான டேனியல் நோசேரா தலைமையிலான குழு உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுப்ப்டிப்பானது அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இதன் உருவம் உண்மையான இலை போன்று இருக்காது. ஆனால் ஒரு இலையின் செயற்பாடுகளை இது துள்ளியமாக செய்யும். உண்மை இலையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த இலையினை உருவாக்கியுள்ளனர்.

மின்சாரம் தயாரிக்க செயற்கை இலைகளை தண்ணீரின் மீது மிதக்க விடப்பட்டு இயற்கையில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை உள்வாங்கி தண்ணீரின் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை இது பிரித்து அதன் வழியாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் தெரிகிறது. அவற்றை வீடுகளுக்கு அருகே இருக்கும் பேட்டரிகளில் சேமித்து வைத்துக் கொள்ளும். அந்த பற்றரிகளில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த முறையிலான மின்சார ஆற்றலை பெறுவதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு மிகவும் குறைவான முறையிலும் இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புறங்களிலும் கூட மின்சாரத்தை எளிதாகப் பெறக்கூடியதாக இருக்கும். ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் ஞசான் டேர்னர் என்பவரால் செயற்கை இலையினை உருவாக்கப்பட்ட போதிலும் அவரது கண்டுப்பிடிப்பு சில குறைப்பாடுகளால் பயன்படுத்தக் முடியாமல் இருந்தது. அவரது கருவியானது அரிதான உலோகங்களால் கட்டப்பட்டு இருந்ததாலும், அவர் கண்டுப்பித்த இலை நிலையற்ற தன்மையுடன் பொதுமக்களும் பயன்படுத்தக் முடியாமல் போனது.

ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த இலையானது இயல்பான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வித சுற்றுச்சூழலிலும் பயன்படுத்தக் கூடியதாகவும், நிலையான மூலப்பொருட்கள் என்பதாலும் இதனை கிராமங்களில் மிகவும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கையான இலையை விடவும் பத்து மடங்கு அதிக ஆற்றல் பெற்றதாகவும் உள்ளது.

தற்போது கண்டுப்பிடிக்கப் பட்டுள்ள செயற்கை இலை தொடர்ந்து 45 மணிநேரம் மட்டுமே இயங்கி மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது, இதன் ஆயுளை அதிகப்படுத்தும் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளதாகவும், விரைவில் இன்னும் ஆற்றல் மிக்க இலைகளை உருவாக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.


நன்றி இணையம்

Comments

  1. நல்ல பதிவு
    http://mahaa-mahan.blogspot.com/

    ReplyDelete
  2. எப்படி நலமா நண்பா
    ஆகா அருமை பயனுள்ள பதிவு.

    நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்