நீண்ட ஆயுளுக்கு நார் சத்துள்ள உணவுப் பொருட்கள் அவசியம்

நார் சத்து நிரம்பிய உணவு பொருட்களை உண்ணுவதால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்' என, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், "நார் சத்துள்ள உணவுப் பொருட்களின் பயன்கள்' பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், நார் சத்து நிரம்பிய உணவுப் பொருட்களை உண்ணுவதால், நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என தெரிய வந்துள்ளது.

ஆய்வு குழு தலைவர் யிக்வுங்க் பார்க் இதுகுறித்து கூறியதாவது:உடல் ஆரோக்கியத்திற்கும், உணவுப் பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இதனடிப்படையில், நார் சத்துள்ள உணவுப் பொருட்களை உண்ணும் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.அப்போது, நார் சத்து நிரம்பிய உணவை உண்பவர்கள், சராசரி நபர்களை விட நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக தெரிய வந்தது.அதுவும் முழுமையான தானியங்களில் இருந்து கிடைக்கும் நார் சத்து, நம் உடலுக்கு மிகவும் பலனளிக்கிறது. இதன் மூலம், பன்மடங்கு நன்மைகள் ஏற்படுகின்றன.

இரைப்பை மற்றும் உணவுக் குழாய்களில் ஏற்படும் நோய்களுக்கு, நிரந்தர தீர்வு காண, நார் சத்துள்ள உணவுப் பொருட்கள் உதவுகின்றன.நீரிழிவு நோய், இதயம் தொடர்பான நோய்கள்மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவற்றை அறவே தவிர்க்க முடியும்.நார் சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகளவில் உண்ணும் போது, இதயம் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள், தொற்றுநோய்கள் ஆகியவற்றுக்கான எதிர்ப்பு சக்தி நம் உடலில் உருவாகிறது.இதனால், தேவையற்ற உயரிழப்புகளும் தவிர்க்கப்படுகின்றன.இவ்வாறு யிக்வுங்க் பார்க் கூறினார்.

நன்றி:- இணையம்

Comments

  1. பயனுள்ள பதிவு. பலரின் கண்களை ஆரோக்கியப் பக்கம் திருப்பும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்