பச்சோந்தி நிறம் மாறும் விதம்

நிறங்கள் என்றால் இயற்கையும் கூட வரும்
நேசம் என்றால் செயற்கையும் கூட வருமா
நிறம் மாறுவதால் அது நேசமா?
மாறாதிருக்க அது போடுவது வேஷமா?


பச்சோந்தி ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். பச்சோந்திகள் அவற்றின் மனநிலை வெப்பம்இ ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை.

பச்சோந்தி தான் இருக்கும் இடத்திற்க்கு ஏற்றாற்போல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்கு காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருக்கிறது. பச்சோந்திக்கு காக்கை கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

நேரத்திற்கு ஏற்றாற்போல் உன்னை மாற்றும் மானிடா
பச்சோந்தி- நிறம் மாறும் தன் பார்வைக்கேற்ப
உன்னைப்போல் உருமாறுவதில்லை உன் வேட்கை தணிக்க
நிறம் கொண்டு மனம் மாறும் நீ
மனித இனத்தின் அவமானம்.
உன்னதம் அது உன் இனம்
சகித்து இருப்பின் சுகித்திருப்பாய்
சன்மானம் நீ .
படித்ததில் பிடித்தது

Comments

Popular posts from this blog

கரப்பான் பூச்சி தலை இல்லாமல் வாழுமா?

நம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்

நன்னம்பிக்கை முனை cape of good hope