சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும்.
  • பப்பாளி


பப்பாளி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி மார்ச் மாதங்களும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.

அடங்கியுள்ள சத்துக்கள்


  • பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ் மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.

  • விற்றமின் ஏ அதிகமாக உள்ளது.

  • கனியக் கனிய விற்றமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும் சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும் பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும் நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விற்றமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

  • மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விற்றமின் பி1இ விற்றமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.

  • பச்சைக் காயிலுள்ள பாலில் செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்
மருத்துவப் பண்புகள்


  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு செரிமானமின்மை அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.

  • பித்தத்தைப் போக்கும்.

  • உடலுக்குத் தெண்பூட்டும்.

  • இதயத்திற்கு நல்லது.

  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

  • கல்லீரலுக்கும் ஏற்றது.

  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்

  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்

  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.

  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.

  • மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

  • பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால் குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும் பப்பாளியிலுள்ள 'பப்பாயின்' என்சைம்களில் 'ஆர்ஜினைன்' என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் 'கார்பின்' இருதயத்திற்கும் ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் தவுகின்றது.

  • பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

  • இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.

  • உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

  • இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் 'பட்டினிச் சிகிச்சை' மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும் வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

  • 'ஆண்டிபயாடிக்' மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர் பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல்தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

  • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள் குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.

  • கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

  • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும் நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது


உலக பதிவுலகில் முதன்
முறையாக....

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு
போங்களே!!

Comments

  1. நன்றிங்க...

    அருமையான தகவலகள் கொடுத்து இருகீங்க..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்