Posts

நம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்

Image
தாம்சன் மற்றும் ஃப்ரேசர் ஆறுகள் சங்கமிக்கும் இடம் (Lytton பிரிட்டிசு கொலம்பியா கனடா) 2. பச்சை மற்றும் கொலராடோ ஆறுகள் சங்கமிக்கும் இடம்   ( கேன்யன்லாண்ட்ஸ் தேசிய பூங்கா , யூனியன் , அமெரிக்கா) 

நன்னம்பிக்கை முனை cape of good hope

Image
 1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் "புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது. நன்னம்பிக்கை முனை ( Cape of Good Hope ) என்பது தென்னாபிரிக்காவின் தெற்குக் கரையோரமாகவுள்ள ஒரு கற்பாறைக் குடா ( headland ) ஆகும். 1488 இல் தூர கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதற்கு இம்முனையைச் சுற்றி வருவது போர்த்துக்கீச மாலுமிகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத மைல்கல்லாக் இருந்தது. தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பெரும் முனையாக இது கருதப்படுகிறது நன்னம்பிக்கை முனை (1888 வரைபடம்) நன்னம்பிக்கை முனையில் 1855 இல் வெளியிடப்பட்ட ஒரு முக்கோண அஞ்சற்தலை நன்னம்பிக்கை முனை ( Cape of Good Hope ) எ

350 மில்லியன் வருடங்களாக மறைந்து வாழ்ந்த உயிரினம் பிடிக்கப்பட்டது

Image
கடலடியில் படத்தில் காட்டப்படும் புதியவகை மீன் இனம் இணங்காணப்பட்டது. சுமார் 2000-6500 அடி ஆழத்திற்கு இடப்பட்ட நிலையில் வாழும் மீன்கள் இவை என்பதால் இவற்றைப்பற்றி இதுவரை மனிதர்களுக்கு தெரியாதிருந்துள்ளது. Knifenose Chimaera ஆர்ட்டிக் சமுத்திரத்தில் படகொண்டில் மாட்டிக்கொண்ட இந்த மீனை ஆராய்ந்ததில் இவை சுமார் 350 மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்வதாக ஊகிக்கப்படுகிறது. (பூமியின் வயது 454 மில்லியன் வருடங்கள் என கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.) முதலில் “goblin shark -(கொப்லின் சுறா)” வகையின் ஒரு பிரிவு என கருதப்பட்டது. எனினும் மரபணு ஆய்வில், இது ஒரு புதுவகை மீன் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Goblin shark கத்தி போன்ற கூரிய மூக்கை உடையவை இவை என்பதால் “Knifenose Chimaera” என பெயரிடப்பட்டுள்ளது. இது Rhinochimaeridae எனும் வகையைச்சேர்ந்ததாக கருதுகிறார்கள். Rhinochimaeridae எனும் சொல், கிரேக்க மொழியில் “மூக்கு” மற்றும் “அரக்கன்” அனும் அர்த்தத்தை ஒன்றினைக்கும் சொல்லாகும்! உலகின் அனைத்து சமுத்திரத்திலும் 2000-6500 அடி வரைக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த இன மீ

தாவர உலகின் பிசாசு

Image
இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்றுதானே கேட்கிறீர்கள்? உயரம் என்று எடுத்துக் கொண்டால் 16 முதல் 98 அடி வரை தான் இருக்கும். செக்வோவியா - ஆஸ்திரேலிய நாட்டு யூக்கலிப்டஸ் மரங்கள் 400 அடிவரை உயரமானவை. மரத்தின் குறுக்களவைக் (விட்டம்) கணக்கிட்டால் 23முதல் 36 அடிவரை உள்ளது. பாவோபாப்தான் வேறு எந்த மரமும் கிடையாது. அதற்கிணையாக மரத்தின் சுற்றளவு 154 அடி வரை உள்ளது. இந்தப் பார்வையில் பார்க்கும்போது பாவோபாப் மரங்கள்தான் உலகின் மிகப் பெரிய மரங்கள். பேரதிசயம் என்னவென்றால் அடிமரத்தின் உட்பகுதி மூங்கில்போல் வெற்றிடம் கொண்ட தாகவும் நீர் நிறைந்தும் இருக்கும். எவ்வளவு தண்ணீர் தெரியுமா? பெரியதோர் பாவோபாப் மரத்தின் கொள்ளளவு 1,20,000 லிட்டர்கள்! மேலும் கடும் கோடைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட ஆவியாக வெளியேறாதவாறு பாதுகாப் பாக வைக்கப்பட்டிருக்கும். தண்ணீரில் வேறு பயனுள்ள சத்துக்களும் உண்டு. வறட்சிக் காலங் களில் மடகாஸ்கர் - ஆப்பிரிக்க நாட்டு ஏழை மக்கள் இதன் நீரைப் பருகிப் பயன்பெறுவர். மேல்மரம் காய்ந்துவிட்ட நிலையில் பல கிராமங் களில் அடிமரத்தை நீர்த்தேக்கத் தொட்டியாகப் பயன்படு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

Image
சோவியத் ஒன்றியப் படையணியின் முக்கிய துப்பாக்கியாக இருந்த ஏகே 47, பின்னாளில் உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகிறது.   ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் காலமானார் ரஷ்யாவைச் சேர்ந்த கலாஷ்னிக்கோவ் துப்பாக்கியை கண்டுபிடித்தவரான மிகெயில் கலாஷ்னிக்கோவ் தனது 94 ஆவது வயதில் மரணமடைந்துள்ளதாக பி.பி.சி. அறிவித்துள்ளது.  இவர் மிகவும் வறிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பதில் 17 பேர்களில் ஒருவராக ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் 1919 ஆம் ஆண்டு கலாஷ்னிக்கோவ் பிறந்தார். இவர் படைத்த துப்பாக்கி முன்னாள் சோவியத் யூனியனில் மட்டுமல்லாமல், வோர்சோ உடன்படிக்கை நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவற்றில் மிக முக்கியமான ஆயுதமாகத் திகழ்ந்துள்ளது. கலாஷ்னிக்கோவின் வடிவமைப்பை ஒட்டி தயாரிக்கப்பட்ட, பல லட்சக் கணக்கான துப்பாக்கிகள் உலகம் முழுவதும் தயாரித்து விற்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது கிடைத்த சன்மானம்   கலாஷ்னிக்கோவ் இரு முறை சோசலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்றப் பட்டத்த

மனிதன் வரையும் உயிருள்ள மர ஓவியம் பொன்சாய்'

Image
  பொன்சாய்" என்ற பதம் எமக்கு ஜப்பானை நினைவூட்டினாலும் இதன் பிறப்பிடம் சீனா என்றே வரலாறு கூறுகின்றது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் சீனாவில் 'புன்சாய்" என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள் மத்தியில் தோன்றியது. கி.மு 7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சீனாவின் அரச தூதுவர்கள் இந்தக் கலையை ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜப்பானின் சென் பௌத்த துறவிகள் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தியானமுறையாக பொன்சாய்களை வளர்க்கத் தொடங்கினர். நாளடைவில் ஜப்பானியர்கள் பல்வேறு விதமான நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதால் இன்று பொன்சாய் ஒரு கலையாக உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளது. - See more at: http://btoptions.lk/serendib/tamilshow.php?id=656#sthash.B86JkeLb.dpuf  பொன்சாய்' என்ற பதம் எமக்கு ஜப்பானை நினைவூட்டினாலும் இதன் பிறப்பிடம் சீனா என்றே வரலாறு கூறுகின்றது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் சீனாவில் 'புன்சாய்' என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள் மத்தியில் தோன்றியது. கி

காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது? சர்வ தேச காற்று தினம் – ஜுன் 15

Image
    நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும். மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது.இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான்.    மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது. இயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொள்வோமா?    உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள். இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம். ஆறு